நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 12, 2019
தேசிய செய்திகள்
1. இந்தியா – நேபாளம் இடையே பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதிக்கும் இடையே 69 கி.மீ நீளத்துக்கு பெட்ரோலியக் குழாய் திறக்கப்பட்டுள்ளது.
2. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அமைப்பு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
3. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
4. இராணுவத்தை நவீனபடுத்த ரூ.9.35 லட்சம் கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிட மத்திய அரசு. திட்டமிட்டுள்ளது
5. நாட்டின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் முதலிடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. ரஷியாவின் எக்டெரின்பர்க் நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் 81 கிலோ பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment