நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 3, 2019
தேசிய செய்திகள்
1. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் அபராத தொகைகள் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
2. ஆழ்கடல் பகுதியை ஆராய தேசிய கடல்கள் தொழில்நுட்ப நிறுவனம் 2021 – 22 க்குள் “சமுத்திரயான்” திட்டத்தை தொடங்கவுள்ளது.
3. தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்.
விளையாட்டு செய்திகள்
4. லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் எரிஸ்லேண்டி லாரா(கியூபா) சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய தினங்கள்
5. மத்திய அரசு செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடி வருகிறது. மையக்கரு – “நிறைவான உணவூட்டம்” (Complementary Feeding)
Comments
Post a Comment