நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 6, 2019
தேசிய செய்திகள்
1. வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக “யாதும் ஊரே” திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் பழனிச்சாமி நியூயார்க்கில் தொடங்கி வைத்தார்.
2. இந்தியா, ரஷியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னை – விளாடிவோஸ்டோக் இடையே தொலைத்தொடர்புகளை மேம்படுத்த கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.
3. தமிழ்நாட்டில் உள்ள சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஒ (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
4. தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வை குறைக்க சிறப்பு மையம் ஒன்றை சென்னை ஐஐடி அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
5. பாகிஸ்தான் கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிகெட் அணியின் வீரர்களை தேர்வுசெய்யும் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
6. செம்டம்பர் 5 - “ஆசிரியர் தினம்”
Comments
Post a Comment