நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 8, 2019
உலக செய்திகள்
1. இறப்புகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்கும் முயற்சியில்,WHO (உலகசுகாதாரஅமைப்பு) தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் உறுப்பு நாடுகள் 2023க்குள் அம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய குழந்தை பருவ தொற்று நோய்களை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளன.
தேசிய செய்திகள்
2. ‘தூய்மை இந்தியா’திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிகழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாககுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி,கோமாரிநோய் மற்றும் புருசெல்லோசிஸ்க்கான தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவில் தொடங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் அவர் தொடங்கவுள்ளார்.
4. சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றி வந்த ‘விக்ரம்’ லேண்டர், தரையிறங்கும்போது பெங்களுரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டரக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
5. தேசிய அளவில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம் கற்பிப்போம்’ எனும் மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தமிழகத்தின் நாமக்கல்,திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களுக்கு தில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
6. புதுடெல்லியின் விஜியன் பவனில் நடைபெற்ற மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ‘ஸவச் மஹோத்ஸவ் 2019’ சிறப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
விளையாட்டு செய்திகள்
7. சிட்டகாங்கில் (பங்களாதேஷ்) ஜாகூர் அகமதுசவத்ரி ஸ்டேடியத்தில் பங்களாதேஷ_க்கு எதிரானபோட்டியை வழிநடத்திய ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் கான், 20 வயது மற்றும் 350 நாட்களில்,உலகின் இளையடெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஆனார்.
Comments
Post a Comment